நீதி Phenomenal அநீதி.

நீதி Phenomenal அநீதி.
==========
வானங்களுக்கு நடுவே
மின்னலால் வன்புணரப்பட்ட மேகங்கள்,
சமுத்திர நீதிபதியின் முன் ஆஜரானது.

சாட்சிகளாக "நீலமும்","நீரும்".
பொய்ச் சாட்சிகளாக
மின்னலின் சப்தங்கள்.

வன்புணர்வாளனின் வழக்கறிஞன்
சமுத்திர அலைகள்.

அ-நீதி கிடைத்தது!!!!
மேகங்கள் வரையாடு குடியிருக்கும் மலைமுடிகளில்
குடிகொள்ளப் போனது.......

மறுபுறம்,
மின்னல்கள் இன்னமும் வெட்டியடிக்குது......
சமுத்திரம் நீதிபதியாகவே ராஜ கிரீடத்தில் அமர்கிறது......

=========
By:சுயாந்தன்.

Comments

Popular Posts