மலைகள்- தமிழக இதழ்

1. பூஜ்ஜியங்கள்.

ஆகாய இடுக்குகளில்
ஆயிரம் பூஜ்ஜியங்கள்.
மணமான மங்கையின்
ரத்தப் பொட்டுவழி
கரையிறங்கிய செம்பூஜ்ஜியங்கள்.
அவளது தீட்டுக்களைத் தீண்டி ஒரு கோயிலின் கருவறையில்
யாவரும் வணங்கும்
சிலையின் பின்வளையமாகி
எம்மை உற்றுப் பார்ப்பதுண்டு.

அப்போதுதான் புதிதாகப்
பிறந்த பூமியின்
கறுப்பிகளும், சிவப்பிகளும்
கண்வெட்டாமல் என்மீது
முதல்காதலை வீசியெறிகின்றனர்.

2. உரையாடல்கள்.

ஒரு பக்கமும் சிந்திக்க முடியாதபடி ஒவ்வொரு
பக்கமும் உருகிவிடுகிறது.

ஒரு பக்கத்தின் நிழலில்
ஒவ்வொரு பக்கத்தின்
உருவும் சதிராடுவதால்
புதுப்பக்கங்கள்
பழைய பக்கங்களை
உரையாட விடுவதில்லை….

3. இடமாற்றம்.

சதுர நிலவுகள்
வட்ட நினைவுகளில் அழ்ந்தன.
ஒருபோதும் அவை வானத்துக்குள் தம் எல்லைகளை விஸ்தரிப்பதில்லை.

சதுரத்தின் நாற்பக்கமும்
கொஞ்சம் கொஞ்சமாக
வேதனைகள் அழுந்தப் பதிந்தன என்று நீள்சதுரமான நட்சத்திரங்கள் விவரிக்கின்றன எங்கோ இருந்து…..

இப்படியான நிலவுகளுக்கு
வானத்தில் இடமில்லை என்பதனால்
அணையுடைத்த குளம் ஒன்று ஊரருகிலுண்டு.

அங்கே குடியிருந்து
வானத்தையும், பூமியையும்
ஆழத்தொடங்கியது வட்ட நிலவுகள்.
சதுர நினைவுகள் கூடவே துணையிருக்க…..

4. தனியறை

சுவர்களில் தொங்கவிடப்பட்ட வானத்தை,
சேர்ட்டுடன் சேர்த்துக் குத்தப்பட்ட பத்து நிலவுகள் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தன.

தனித்த விண்மீனின்
வெளிச்சம் அணைக்கப்படவில்லை.
யார்மீதோ ஏறிப்போகும்
கருமுகில்கள் தொங்கவிடப்பட்ட வானின் நீலத்துடன் இப்போது அழையாத விருந்தாளியாக…..

Link.
http://malaigal.com/?p=10093

Comments

Popular Posts